கல்முனை ஆதார வைத்திய சாலையில் பல வருடங்களாக எதுவித கொடுப்பனுவும் இன்றி தொண்டர்களாக சேவை செய்த தமிழ் இளைஞர் யுவதிகள் நிரந்தர நியமனம் கோரி கடந்த ஐந்து நாட்களாக அடையாள கவனயிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் இணைந்து கொண்டுள்ள தொண்டர்கள் கருது தெரிவிக்கையில் இனவாதம் கொண்ட அமைச்சர் அதாவுல்லாவின் பக்கசார்பாக நியமனம் வழங்கும் நடவடிக்கைக்கு அரசு துணை போக கூடாது என கோரிக்கை விடுத்தனர். அத்தோடு வேதனம் எதுவும் இன்றி தொண்டர்களாக கடமையாற்றும் தமிழ் இளைஞர் யுவதிகள் இருக்க அரசியல் இலாபம் கருதி இனவாத சிந்தனையுடன் அமைச்சர் ஒருவர் பக்க சார்பாக நியமனம் வழங்கும் நடவடிக்கையை அரசும் தமிழ் தலைவர்களும் தடுத்து நிறுத்தி தமக்கு நியாயமான தீர்வை தர வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.